×

சாமி ஊர்வலத்தில் கோஷ்டி மோதல்

காலாப்பட்டு, மார்ச் 24: காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடி நடுத்தெருவில் அய்யனாரப்பன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சாமி வீதிஉலா கடந்த 21ம் தேதி இரவு நடந்தது. அப்போது இளைஞர்கள் நடனமாடிக் கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்பினர் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் இரும்புக்கம்பி, தடி போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர், கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இது தொடர்பாக பிள்ளைச்சாவடி தேரோடும் வீதியை சேர்ந்த மாரியப்பன் (24) என்பவர் கொடுத்த புகாரின்பேரில், அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் (22), சிவகுரு (22), சக்திகுரு (20) ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். இதேபோல் ஆனந்த் என்கிற பாஸ்கர் அளித்த புகாரின்பேரில் அதே பகுதியை சேர்ந்த வேலு என்கிற முருகன், ரகு, மாரியப்பன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும், இரு தரப்பிலும் அடையாளம் தெரியாத
2 பேர் உள்பட மொத்தம் 8 பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

Tags : Koshdi ,Sami ,
× RELATED ராணிப்பேட்டை அருகே உள்ள...